சனி, 25 ஜூன், 2011

பண்பானவர்!

வணக்கம் உறவுகளே!

நிருபன் செல்வரட்ணம் என்ற பெயரையும், அவரின் முகத்தையும் முகநூலிலை தான் முதலில் பார்த்திருக்கிறேன்.

அதற்கப்புறம் தான் எங்கவூரவை நிகழ்வில் இடைக்கிடை தூரமாக அவரது முகத்தை அவதானிக்க ஆரம்பித்தேன்.
பார்த்தவுடனேயே எல்லோரையும் கவரக்கூடிய சாதுவான குணத்தை கொண்ட இளைஞர் என்பதை புரிந்துகொண்டேன்.

இப்படிப்பட்ட ஒருவருடன் நெருங்கிப்பழக எதிர்பாராத விதமாக எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை அவரது பிறந்த நாளான இன்று உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

ஆறுமுகம் இளையய்யாவின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதிற்காக மொன்றியால் சென்றபோது எதேச்சையாக நாங்கள் ஒரே வாகனத்தில் இணைந்து பயனிக்க வேண்டிய அந்த அரிய சந்தர்ப்பம் கிடைத்தது.

அன்று எங்களது பயணம் கிட்டத்தட்ட 10 மணித்தியாலங்களிற்கு மேல் இருந்திருக்கும்.   அன்றும் ஆரம்பத்தில் இவருடன் நான் அதிகமாக பேசவில்லை,   இருப்பினும் மற்றவர்களுடன் இவரது சம்பாஷனையை அவதானித்த வண்ணமே இருந்தேன்.

அப்போது திடீரென எனது கைத்தொலைபேசியில் பிறந்த நாளை நினைவு படுத்தும்(birthday alert) செய்தி வந்தது, உடனே அவரிடம் கேட்டேன் உங்க பெயர் என்னவென்று, அவர் தனது பெயரை சொன்னபோது தான் நான் எனது தொலைபேசி செய்தியை காட்டி உங்களது பிறந்த நாள் எனக்கு நினைவுபடுத்தி செய்தி வந்துள்ளது என்றேன்.

அதற்கப்புறம் தான் பேச ஆரம்பித்தோம்,  அவரது ஒவ்வொரு பேச்சிலும் மிகவும் தெளிவும்,  அறிவும்,  பணிவும் வெளிப்பட்டதை பார்த்து ஒருகணம் திகைத்துவிட்டேன்.

வாகனம் ஓய்வுக்காக நிற்பாட்டும்போது வாகனத்தில் வந்தவர்களை பராமரித்த விதமும், அவர்களுடன் பேசிய விதமும் என்னை மிகவும் கவர்ந்து விட்டன.   இந்த சிறுவயதிலை இப்டியான குணம் படைத்த ஒரு இளைஞனை நேரில் பார்த்த சந்தோசம் எனது நெடுந்தூரப்பயணம் இனிமையாக அமைய ஒரு காரனமாக இருந்தது.

இப்படிப்பட்ட அந்த பண்பான இளைஞன் எங்கவூர் உறவாக நினைத்துப்பார்க்கையில் மகிழ்ச்சியடைகின்றேன்.

இன்றைய நாளை பிறந்த நாளாகக்கொண்ட எனது உடன்பிறவா சகோதரன்
நிருபன் செல்வரட்ணம் சகலதும் பெற்று பல்லாண்டு காலம் நலமுடன் நீடூழி வாழ்கவென எல்லோர்க்கும் பொதுவான இறைவனை வேண்டி வாழ்த்துகின்றேன்....

வாழ்க, நீ நீடூழி வாழ்க!!!

நன்றி,
மு.லிங்கம்,
25. யூன். 2011.

2 கருத்துகள்: