திங்கள், 1 ஆகஸ்ட், 2011

சமர்ப்பனம்!!!


"தேவன்குறிச்சியூர் திருமறைத்தொண்டன்" அமரர்  இளையதம்பி ஆறுமுகம் ஜயா அவர்கள் எங்களை விட்டகன்று அதாவது ஜயாவை நாங்கள் இழந்து 46 நாட்களின் பிற்பாடு 31.08.2011 ஞாயிற்றுக்கிழமை  அன்று  ஜயாவை கெளரவிக்கு முகமாக ஜயாவின் குடும்பத்தினரின் ஆதரவுடன்,   "கற்பகத்தான்"  இணையத்தளம்,  "எங்க ஊர் இலக்கணாவத்தை"  முகநூல் குழுமம்,  "இலக்கணாவத்தை மக்கள் ஒன்றியம் கனடா"  நிர்வாகத்தினர் இணைந்து இலக்கணாவத்தையில் வாழும் எமது உறவுகளின் ஆலோசனைகளையும் உள்வாங்கி ரொரண்டோ நகரில் அமைந்திருக்கும் பிரபல்யமான "சங்கமம்" மண்டபத்தில் கிட்டத்தட்ட 300 உறவுகளிற்கு மேல்  சூழ்ந்திருக்க  மிகவும் உணர்வுபூர்வமாகவும், எழுச்சியாகவும், புலம்பெயர்ந்து வாழும் இளம் சந்ததியினருக்கு  சிந்தனையை தூண்டும் விதமாகவும் ஜயாவின் நினைவஞ்சலி நிகழ்வு மிகவும் வெற்றியாக இடம்பெற்றுள்ளது.

ஜயாவின் நினைவஞ்சலி நிகழ்வு வெற்றியாக நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனைத்து தரப்பினராலும் இந்த பொறுப்பை என்னிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது.   இவர்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற பிடிவாதத்தினாலும்,  இலக்கணாவத்தை மக்கள் பிற ஊர் மக்களிற்கு முன்னோடிகள் அதாவது எதிலும் உதாரனமாக அமையவேண்டும் என்ற எதிர்பார்ப்பு  கொண்டும்  இந்த நிகழ்வை தம்பி சுதா, மருமகன் குகரூபன், மருமகள் பவதாரனி ,  இன்னும் சிலர் தங்களது பெயரை வெளியிட விரும்பாதோர் உட்பட  அனைவரும் இணைந்து மிகவும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் தயார் படுத்தியிருந்தோம்.
இந்த நிகழ்வு கிட்டத்தட்ட மு.ப 11.45 மணியளவில் திரு மு.லிங்கம் அவர்கள் அன்னாரின் குடும்பத்தினர் சார்பில் சபையோருக்கு வணக்கம் கூறி, சபையோரை வரவேற்றுக்கொண்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்கள்.
நிகழ்வு Ontario மாநில இந்துசமயபேரவை திருக்கூட்டத்தின் பேரவையின் செயலாளர்  சிவ முத்துலிங்கம் ஜயா குழுவினரின் பஜனையுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இரண்டாவது நிகழ்வாக கெளரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது, 

அனைத்து இலக்கணாவத்தை மக்களின் ஏகோபித்த குரல்களான  "கற்பகத்தான்", 'எங்க ஊர் இலக்கணாவத்தை",  "இலக்கணாவத்தை மக்கள் ஒன்றியம் கனடா"  இணைந்து   "தேவன் குறிச்சியூர் திருமறைத்தொண்டன்"  என்ற கெளரவப் பட்டத்தை ஜயாவிற்கு வழங்கி கெளரவித்துள்ளது.

இந்த நிகழ்வின்போது மருமகன் குகரூபன், தம்பி சுதாவின் அனுசரனையுடன் வடிவமைக்கப்பட்ட கெளரவ சான்றிதழை திரு,திருமதி கற்பகஈஸ்வரன்(ஈஸ்வரன்) தம்பதியினர் வழங்க அன்னாரின் மூத்த மகனான திரு. குகதாஸன்(குகன்) தம்பதியினர் பெற்றுக்கொண்டனர்.  இந்ததருனம் அதாவது இந்த நிகழ்வு இடம்பெற்ற நிமிடம் அனைவரும் எழுந்து நின்று தங்களது உணர்வுகளை வெளிப்படித்தியிருந்தனர்.
மூன்றாவது நிகழ்வு,
"கற்பகத்தான்",  "எங்க ஊர் இலக்கணாவத்தை" இணைந்து தயாரிக்கப்பட்ட ஒளிச்சித்திரம் திரையிடப்பட்டது.
இந்த சித்திரத்தில் ஊரில் வாழ்ந்துகொண்டிருக்கும் பல உறவுகளின் ஆறுமுகம் ஜயா பற்றிய இரங்கல் செய்திகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இன்று இடம்பெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் இதுவே அனைவரினதும் கவனத்தை மிகவும் ஈர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் தயாரிப்பிற்கும், வெற்றியிற்கும் மருமகன் குகரூபன், தம்பி சுதா பொன்றோர்களின் விடா முயற்சியே காரனமாகியிருந்துள்ளது.
இதில் அவர்கள் தங்களது தியாக மனப்பான்மையை நிறையவே வெளிப் படித்தியிருக்கின்றார்கள்.  
நான்காவது நிகழ்வு,
இரங்கல் உரைகள் இடம்பெற்றன, முறையே சிவராசன்னா, தேவியக்கா போன்ற உறவுகள் தங்களது மனக்குமுறல்களை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
அடுத்து தாயகத்தில் இருந்து சமாதான நீதிவான்(JP),  அகில இலங்கை குருபீடாதிபதி, அகில உலக சைவ குருமார் சம்மேளனம் தலைவர்,  வல்வை முத்துமாரியம்மன் பிரதம குருவாகிய  சிவசிறி சொமஸ்கந்த தண்டபாணிக தேசிகர் அவர்களால் "மறக்க மடியாத ஆறுமுகத்தின் நினைவுகள்" என்ற தலைப்பில் அனுப்பப்பட்ட இரங்கல் செய்தி லிங்கம் அவர்களின் குரலில் வழங்கப்பட்டது.
இதன்போது தண்டபாணி ஜயாவிற்கும் எங்கவூருக்குமுள்ள பிணைப்பை தெளிவுபடுத்தினார்.  2004 ல் இடம்பெற்ற கற்பகவிநாயர் ஆலய கும்பாபிஷேகத்தின்போது தண்டபாணி ஜயாவே தலைமை தாங்கி நடத்தியதையும் நினைவுபடுத்தினார்.
அடுத்து ஒரு கவிதை இடம்பெற்றது,  சகோதரி சித்தாரா மகேஸ் அவர்கள் தன்னை ஜயாவின் பேத்தி என்று உறுதிப்பட உரிமையில் தனது இரங்கல் செய்தியை கவி வடிவில் எழுதி அனுப்பியிருந்தார். 
இதற்கு செல்வி மிதுஷா சிற்றம்பலம் தனது இனிய குரலில் மறு உயிர் கொடுத்திருந்தார்.
கனடாவில் வாழும் உறவுகள் குரலாக இயங்கும் "இலக்கணாவத்தை மக்கள் ஒன்றியம்" சார்பாக மு.லிங்கம் அவர்களினால் வரையப்பட்ட இரங்கல் கவியிற்கு. நிர்வாகத்தின் செயலாளர் யோகு அவர்கள் குரல்வளம் கொடுத்திருந்தார்.
மருமகன் குகரூபன் அவர்களினால் அனுப்பப்பட்ட இரங்கல் கவியிற்கு மு.லிங்கம் அவர்கள் குரல் வழங்கியிருந்தார்.
நிகழ்வின் இறுதியில் அன்னாரின் இளைய மகன் அகிலன் அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டது.
இதில் முக்கியமாக "கற்பகத்தான்" , " எங்க ஊர்  இலக்கணாவத்தை", போன்றோருக்கு பிரத்தியேகமான நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.
இடம்பெற்ற நிகழ்வுகளை தொகுத்து வழங்கிய லிங்கம் அவர்கள் இந்த நிகழ்விற்கு அனைத்து தரப்பினராலும் கொடுக்கப்பட்ட முக்கியத்தையும், அதற்குரிய காரனங்களையும் ஒவ்வொரு நிகழ்வுகளின் இடையிலும் பட்டியலிட்டு வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
இதன்போது "கற்பகத்தான்" , "எங்க ஊர் இலக்கணாவத்தை" போன்றவற்றின் செயல்பாட்டையும், அதன் தேவையையும் வற்புறுத்தினார்.
இதில் இயங்கும் இயக்குனர்களையும், நிர்வாகத்தினரையும் பாராட்டினார்.
நிகழ்வின் இறுதியில் மதியபோசனம் வழங்கப்பட்டது, அதன்போது உறவுகள் ஒருத்தருக்கொருவர் நலம் விசாரித்ததை அவதானிக்க முடிந்தது. 
கனடாவில் முக்கியமாக ரொரண்டோவில் எத்தனையோ லட்சம் தமிழர்கள் வாழும் சூழ்நிலையில், இடம்பெற்ற ஒரு முன்னுதாரனமான நினைவஞ்சலி நிகழ்வாகவே இதை பலராலும் நோக்கப்படுகின்றது.
இங்கு இடம்பெறும் இதைப்போன்ற நிகழ்வுகளிற்கு இது ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதில் ஜயப்பாடே இல்லை.

ஓம் சாந்தி!

4 கருத்துகள்:

  1. மிக்க நன்றிகள் மாமா உங்கள் சுயநலமற்ற காரியங்கள் சேவைகள் பணிகள் கடமைகள் தொடர கற்பகத்தான் அருள் புரிவாராக ..........

    பதிலளிநீக்கு
  2. அண்ணா ஒவ்வொரு எழுத்திலும் தங்கள் வெற்றிப் பூரிப்புத் தெரிகிறது. நிகழ்வின் வெற்றியை அறிகையில் மிகவும் சந்தோசமாக இருக்கிறது.... தங்கள் ஆசையும் கனவுகளும் நிறைவேற என்றும் மூவரும் துணையாகவே இருப்போம்...

    பதிலளிநீக்கு
  3. தம்பி சுதா அவர்களினால் அனுப்பப்பட்ட ஒளிச்சித்திர வடிவான கவிதையும் திரையிடப்பட்டது, அதை குறிப்பிட தவறிவிட்டேன்.

    பதிலளிநீக்கு