வியாழன், 21 ஏப்ரல், 2011

மதிப்பிற்குரியவர்!!!

அனைத்து உள்ளங்களிற்கும் வணக்கம்,

நாம் வாழுகின்றபோதே மற்றவர்களினால் போற்றப்படனும், பாராட்டப்படனும் அப்போது தான் நாம் எங்களது வாழ்க்கையில் பூரனமடைகின்றோம் அதாவது வாழ்க்கையின் உச்சத்தில் நிற்கின்றோம் என்று பொருட்படும்.

இன்றைய எனது இந்த ஆக்கத்தில் அப்படிப்பட்ட ஒரு உயர்ந்த உள்ளத்தைப் பற்றி சில வரிகள் பதிய விரும்புகின்றேன்.

எங்களால் கந்தசாமி மாமா என்று அழைக்கப் பட்டுவரும் கந்தசாமி அவர்களை நான் அறிமுகப்படுத்தி தான் நீங்கள் அறிவேண்டிய அவசியமில்லை.
இவர் தனது இளமைப் பருவத்தின் போது அதாவது படிப்பு, தொழில் சம்பந்தமாக பெரும்பகுதியான காலங்களில் ஊருக்கு வெளியே போக்கியிருந்தாலும் ஊரில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ள தவறுவதில்லை.   இவரது எண்ணங்கள், சிந்தனை, ஆதரவு, பற்று முழுக்க ஊர் சம்பந்தமாகவும், ஊர் மக்கள் சார்பாகவுமே இருந்துள்ளன என்பதை நான் அனுபவப்பட்டது மட்டுமன்றி இவரது படத்தை முகநூலில்(facebook) http://www.facebook.com/?ref=home#!/photo.php?fbid=1487627850306&set=o.333770126646&type=1&theater இணைத்தபோது உங்களிடம் இருந்து எனக்கு கிடைக்கப்பெற்ற தனி மடல்கள் மூலமாகவும் புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. 

தான்பாடு தன்பாடு என்று தனது வாழ்க்கையை போக்கிக் கொண்டிருக்கும் இவர் மீது எமதூர்மக்கள் அதாவது இலக்கணாவத்தை மக்கள் மட்டுமன்றி அயல் ஊரவர்களுமே பெருமதிப்பை பேணி வருகின்றனர்.

1970களிலை நாம் கொழும்பு செல்வதென்றால் இன்று வெளிநாடு செல்வதை விட பன்மடங்கு வியப்படைய வேண்டிய காலமாக இருந்தது.
அனேகமாக வெளிநாடு செல்லும் அலுவல்களாக தான் எங்க உறவுகள் கொழும்பு செல்வது வழமையாக இருந்தது.
அன்று கொழும்பு செல்லும் எங்கவூர் உறவுகளை வரவேற்கும் ஒருஉறவு இவர் மட்டும்தான் என்பதில் எந்தவிதமான ஜயப்பாடும் இல்லை.
கொழும்பு செல்லும் எங்கவூர் உறவுகளின் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமன்றி அவர்களிற்கு இருப்பிட வசதி, உணவு உட்பட சகல ஏற்பாடுகளையும் தானே செய்து வழி அனுப்பி வைக்கும் ஒரு உயர்ந்த உள்ளம்.

2004ல் நான் தாயகம் சென்றபோது இவர்மீது எமது மக்கள் வைத்திருக்கும் பற்றையும், மதிப்பையும் நேரில் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
அங்கு இடம்பெறும் ஒவ்வொரு நிகழ்வின்போதும் இவரது வரவை ஒரு கெளரவமாகவே நினைத்துக் கொள்கின்றனர்.
இப்படியான உயர்ந்த உள்ளம் இன்னும் பல்லாண்டுகாலம் நலமுடனும் வளமுடனும் வாழ்ந்து எமது மக்களிற்கு பயன்படவேண்டுமென வாழத்துகின்றேன்.

நன்றி,
மு.லிங்கம்.
21-04-2011

4 கருத்துகள்:

  1. அனைத்தும் உண்மைதான் நானும் என்குடும்பமும் பல்லாண்டுகாலம் நலமுடனும் வாழ வாழ்த்துகிறோம்

    பதிலளிநீக்கு
  2. அண்ணா தங்களின் பதிவை 100 வீதம் நான் வழி மொழிகிறேன்... எனக்கு சிறுவயதில் இவரை அறிமுகம் இல்லாவிடினும் தற்போது நல்ல அறிமுகம் கிடைத்தது... ஒரு தன்னலமற்ற மனிதர்.. ஊரிலும் ஆலயத்திலும் நல்ல பற்றக் கொண்டவர்... அவர் இன்னும் சிறப்புடன் நீடு வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  3. நன்றி சுதா! என்னை விட உங்களுக்குத் தான் இன்னும் பலரை இனம் காணக்கூடியதாக இருக்கும்.
    அவர்களை நாம் கெளரவிக்கவேண்டும்.
    முயற்சி செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு