செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

கற்பக விநாயகரின் 2011ம் ஆண்டு திருவிழாவும், புலம்பெயர்ந்த இலக்கணாவத்தை மக்களும்!!!

வணக்கம் உறவுகளே!
இலக்கணாவத்தை கற்பக விநாயகரின் திருவிழா ஆரம்பமாகி இன்று தேர்த்திருவிழாவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இதுவரை காலமும் இடம்பெற்ற கற்பகத்தானின் திருவிழாவிற்கும் இந்த வருடம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் விழாவிற்கும் இடையே நிறையவே வித்தியாசங்கள் அதாவது சிறப்புக்கள் உள்ளன. 


 

இன்னும் சற்று விரிவாக   கூறுவதானால், உதாரனத்திற்கு  என்னை எடுத்துக்கொண்டால் நான் ஊரைவிட்டு புலபெயர்ந்த பெரும்பகுதியான காலங்களில் எங்கள் ஆலயத்திருவிழா இடம்பெற்று முடிந்த பலகாலங்களின் பின்பே திருவிழா நடந்ததாக அறிந்துகொள்வது வழமை.
ஆனால் இன்று அங்கு இடம்பெறும் ஒவ்வொரு நிகழ்வும் நிமிடத்திற்கு நிமிடம் அறிந்து கொள்ளக்கூடிய வசதிகளை அங்குள்ள உறவுகள் சுதாவின் முயற்சியினால் செய்து தந்துள்ளார்கள்.

நான் "எங்க ஊர் இலக்கணாவத்தை" என்ற பெயரில் முகநூல்(Facebook) ஆரம்பித்தபோது இப்படித்தான் இடம் பெறவேண்டும் என்ற கனவு இருந்தது, எனது கனவிற்கும், கற்பனையிற்கும் செயலுரூபம் கொடுத்துக் கொண்டிருக்கும் தம்பி சுதாவுக்கும், அவருடன் இணைந்திருக்கும்  அனைத்து உறவுகளிற்கும் இந்தக்கணத்தில் பலகோடி நன்றிகள் கூற ஆசைப்படுகின்றேன்.


எங்கள் ஆலயத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் விழா நிகழ்வுகள் பற்றிய செய்திகளையும், படங்களையும் இணைத்துக் கொண்டிருந்த ஆரம்ப நாட்களில் இதை ஒரு சம்பவமாகவும், செய்திகளாகவும் கவனித்துக் கொண்டிருந்த புலம்பெயர்ந்த உறவுகள் நாளடைவில் இதை ஒரு அற்புதமான தரிசனமாகவே உணரத் தொடங்கி விட்டார்கள் என்பதையும் அவர்களின் உணர்வுகளையும் தொலைபேசி மூலமாகவும், Email பரிமாற்ற மூலமும் என்னுடன் பகிர்ந்து கொள்கின்றார்கள்.
இதை அறிந்து கொள்ளும்போது எனது உணர்வுகளை அதாவது மகிழ்ச்சியை வார்த்தைகளிற்குள் உள்ளடக்க முடியாது.


இதைப்போன்ற இன்னும் பல செயல் திட்டங்களை பலரும் பயன்படக்கூடிய முறையில் நாங்கள் நிறைவேற்ற வேண்டும், இதற்காக நாங்கள் உறவுகளாய், கூட்டாக இணையவேண்டும்.
இதுவரை "எங்க ஊர் இலக்கணாவத்தை" என்ற முகநூல் குழுமத்தில் உறுப்பினராக இணையாதவர்கள் தயவுசெய்து இணைந்து கொள்ளுங்கள்.
வாருங்கள் இணைவோம் உறவுகளாய், உறவுகளுக்காக.

மு.லிங்கம்.

2 கருத்துகள்: